பக்கம்:நூறாசிரியம்.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாவலரேறு பெருஞ்சித்திரனார்

71


திறம்புதல் - மாறுபடுதல், தில்-திர்-திரு.திருகு திரும்பு-திறம்பு-திருகு. மாறுபாடு.

ஆராவிருள் - பொருந்திய விருள். விலக்கலாகா விருள்.

“மாந்த வியல்பாந் தன்மைகள் எல்லாம் முறையே குலைந்தும், வறியதாகியும், சிதைவுற்றும், இறந்தும், இழிந்தும் அழிந்தும் படுதலால், அவை யடி யொட்டிய மாந்த வாழ்வின் இயற்கையும் மாறுபட்டதென்க: :படவே அதற்கு நிலைக் களனாக உள்ள உலகமும் இருள் நிரம்பிய அழிநிலை நோக்கி விரைந்து செல்வதும் இயல்பேயாம் என்க” என எதிரது கூறி இழிவது தடுத்தலாம் இப் பாடல் என்க.

இது பொதுவியல் என்திணையும், முது மொழிக் காஞ்சி என் துறையுமாம் என்க.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நூறாசிரியம்.pdf/97&oldid=1181848" இலிருந்து மீள்விக்கப்பட்டது