பக்கம்:நெஞ்சக்கனல்.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

112

நெஞ்சக்கனல்


இப்படி அவன் சல்லியாக மாறி ரிக்ஷாக்காரன் போல் இறக்கி விடுகிற இடம் பார்த்துத் தகராறு செய்யும் நிலைக்கு வரவே அருகிலிருந்த பிரகாசம் கமலக்கண்ணனுக்கு ஜாடை செய்து உள்ளே அழைத்தார். அவர் உள்ளே வந்ததும்,

“சுத்த செங்காங்கடைப்பசங்க இவங்களோட ரொம்பப் பேச்சு வச்சுக்காதீங்க...கொடுக்கிறதை மரியாதையாக் கொடுக்கிற மாதிரிக் கொடுத்தனுப்பிச்சிடுங்க...” என்றார் பிரகாசம்.

“அதென்னமோ சேரிமக்களுக்கு உங்க மேலே அபாரப் பிரியம், அமோகமான மரியாதை, அதுனாேலதான் மாலை மரியாதை, ஆரத்தி எல்லாம்னு நீயே சொன்னியே பிரகாசம்?”

“சொன்னேன் சார்! ஆனா என்ன செய்யிறது. இந்தக் காலத்திலே பணமில்லேன்னா என்னதான் நடக்குது?’’

இதற்குப் பதில் சொல்லக் கமலக்கண்ணனால் முடியவில்லை. பேசாமல் வெளியே வந்து மரியாதையாக அந்த ஆளிடம் பணத்தை எடுத்துக் கொடுத்தார். கூடவே இன் னொரு பத்துருபாயும் தனியே கையில் கொடுத்து இதைக் காப்பிச் செலவுக்கு வச்சிக்க’ என்று போலியாக வர வழைத்துக்கொண்ட ஒரு சிரிப்புடன் கூறி வைத்தார் கமலக்கண்ணன்.

“ரொம்பச் சந்தோசங்க... மத்ததெல்லாம் நான் பாத்துக்கறேன். லாட்டா அத்தினி ஸ்லம் ஒட்டும் உங்களுக்குத்தான்வுளும்” என்று கூறிப் பெரிதாக ஒரு கும்பிடும் போட்டு விட்டுப் போனான் அவன்.

கமலக்கண்ணனுக்குப் பிரகாசத்தின் மேல் ஒரு சந் தேகமும் வந்தது. ‘மாலை, ஆரத்தி, திலகம் எல்லாமே பிரகாசத்தின் ஏற்பாடுதானா?’ என்று தோன்றியது. ‘எல்லாம். பிரமாதமாச் செய்து ஐயாவைக் குவிப்படுத்தனிங்கன்னா அஞ்சுக்குப் பத்தாக் குடுப்பாரு’ என்று பிரகாசமே அந்தச் சேரி ஆட்களைத் தூண்டிவிட்டிருக்கலாமென்று அநுமானிக்க முடிந்தாலும் பிரகாசத்திடம் அதை அவர் கேட்கவில்லை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நெஞ்சக்கனல்.pdf/114&oldid=1048390" இலிருந்து மீள்விக்கப்பட்டது