பக்கம்:நெஞ்சக்கனல்.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

114

நெஞ்சக்கனல்


“பார்த்துச் செலவு செய்யி...ஏகமா ரூபாய் செலவழியிது” என்று கவலையோடு சொல்லியபடியே பணத்தை எடுத்துக் கொடுத்தார் கமலக்கண்ணன்.

“கவலைப்படாதீங்க சார்! நிச்சயமா ஜெயிச்சுடுவீங்க. மந்திரியா வர்ரத்துக்கும் சான்ஸிருக்கு...அப்படியே இல்லையின்னாலும் போட்ட பணத்தை எடுத்துடலாம். நாலு மெடிகல் காலேஜ் அட்மிஷன் ரெண்டு என்ஜினீயரிங் காலேஜ் அட்மிஷன்னு வராமலா போயிடுவாங்க...”

கமலக்கண்ணனுக்கு என்னவோ பயமாகத்தான் இருந்தது. பணத்துக்கு பணமும் நஷ்டமாகி அவமானமும் ஆகிவிடக் கூடாதே என்று பயந்தார் அவர்.

அவருடைய மனைவி வேறு மாதர் சங்கத்துப் பெண்களை அழைத்துக்கொண்டு வீடு வீடாகக் கணவனுக்கு ஒட்டுப் போடுமாறு வேண்டிக் கொண்டிருந்தாள். நாலா விதங்களிலும் முழு மூச்சாகப் பிரச்சார வேலை நடந்து கொண்டிருந்தது. அந்தக் கவலையும் பயமும் நிறைந்த இரவுகளில் கமலக்கண்ணன் நிறையக் குடித்தார். இன்னும் சில இரவுகளில் மதுவின் மயக்கத்தோடு மாயாதேவியின் துணையும் வேண்டியிருந்தது அவருக்கு.

தேர்தலுக்கு இரண்டு மூன்று நாட்கள் இருக்கும் போது, சேரிப் பக்கமாகப் போன போது பிரகாசத்தை யாரோ எதிர்த்தரப்பு ஆட்கள் அடித்துப் போட்டுவிட்டு ஓடிவிட்டார்கள். சேரியில் ஏதோ ஒட்டுக்குப் பணம் கொடுத்துவிட்டுப் போக வந்ததாகச் சந்தேகப்பட்டு அடித்துவிட்டதாகத் தெரிந்தது. கமலக்கண்ணன் பிரகாசத்தை ஆஸ்பத்திரியில் போய்ப் பார்த்துவிட்டு வந்தார்.

வழக்கப்படியும் விதியை அநுசரித்தும் தேர்தலுக்கு நாள் நெருங்கி வரவரப் பொதுக்கூட்டங்கள், பிரசார மேடைகள் நிறுத்தப்பட்டன. போர் தொடங்கப்படுவதற்கு முந்திய போர்க்களம்போல் நகரம் அமைதியடைந்து விட்டது.

கமலக்கண்ணனுக்கான தேர்தல் ஏஜண்டுகள் ‘போலிங் பூத்’ வாரியாக நியமிக்கப்பட்டார்கள். அவர்கள் தவிர

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நெஞ்சக்கனல்.pdf/116&oldid=1048394" இலிருந்து மீள்விக்கப்பட்டது