பக்கம்:நெஞ்சக்கனல்.pdf/175

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

173


“உண்மையிலே பார்க்குப் போனா இது ஒரு பெரிய பழியைத் தரவேண்டிய கெட்ட காரியமே இல்லே. மிஸ்டர் சர்மா! நான் எதிலேயும் ‘கமிட்’ பண்ணிக்கலே, அப்படி இருந்தும் பழி எல்லாம் எனக்கு வந்துவிட்டது. போன் பண்ணிச் சொன்னதுக்கூடப் ப்ரூப் இல்லை. ஒரே அடியா எனக்கும் இதுக்கும் சம்பந்தமில்லேன்னு அடிச்சுப் பேசி ருக்கலாம் ஆனால் அப்பிடியும் எனக்குப் பேசவரவில்லை.”

“எல்லாம் காலக்கோளாறு. ‘பாஸ்லிங்கிளவிட்ஸ்’ தான் எல்லாம் சரியாயிடும். முருகன் கிருபை பண்ணுவான்.”

“கிருபை பண்ணலியே மிஸ்டர் சர்மா! விஷயம் பெரிசாவில்ல ஆயிட்டுது.”

“கவலைப்படாதிங்கோ... எல்லாம் சரியா ஆகும். கொஞ்ச காலத்துக்குத்தான் போறாது. உங்களுக்கிருக்கிற பணத்துக்கு இந்த டர்ட்டி ‘பாலிடிக்ஸ்’ல இறங்கியிருக்கணும்கிறதே இல்லை...”

“அதென்ன சரியாகும்னும் சொல்றீங்க, டர்ட்டி பாலிடிக்ஸ்ல இறங்கியிருக்க வேண்டாம்னும் சொல்றீங்க...”

“பொதுவாகச் சொன்னேன். வேறேனுண்னுமில்லே” இன்னும் ஒரு பத்து நாள் கழிந்தது. இதற்கிடையில் கமலக்கண்ணன் வீட்டு வாசலில் ஒரு கட்சி பிரமுகர் உண்ணாவிரதம் தொடங்கியிருந்தார். முதன் மந்திரியோ சகமந்திரிகளோ அந்த உண்ணாவிரதக்காரரைக் கண்டிக்க முன் வரவில்லை மாறாகக் கமலக்கண்ணனுக்குக் கிடைத்த அந்தரங்கத் தகவல்களின்படி முதன்மந்திரியும், மற்ற மந்திரிகளும் இவற்றையெல்லாம் ஆதரித்துச் சும்மா இருப்பதாகவே தோன்றியது. இந்நிலையில் அடுத்த அசெம்பிளி செஷன் தொடங்கவேண்டிய நாளும் நெருங்கியது. கமலக்கண்ணனுக்குத் தன் நிலைமை.இன்னும் தெளிவாகவில்லை, மனக்குழப்பமும் அவரை விட்டப்பாடில்லை. எதிரிகளின் கண்டனக்கணைகளும், எதிர்ப்புக் கூட்டங்களும், உண்ணா விரதங்களும் இன்னும் நின்றபாடில்லை. கடைசியாக அசெம்பிளி கூடுமுன்பே முதன் மந்திரியை வீட்டில் பார்த்து விடுவதென்ற முடிவிற்கு வந்தார் கமலக்கண்ணன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நெஞ்சக்கனல்.pdf/175&oldid=1049492" இலிருந்து மீள்விக்கப்பட்டது