பக்கம்:நெடுநல்வாடை-மனையுறை புறாக்கள்.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பல்வேறு வளங்களும் குவிந்துகிடக்கும் அந்தி அங்காடிகளில், உரிமையாளர்கள், மாலைக்கடனை, வி ழ வா. க ேவ கொண்டாடி மகிழும் நலம் கண்டு மனம் நிறைவுற்ற அவர் வாயினின்றும் வெளிப்போந்த சில வரிகள் அவை இவை :

'வெள்ளி வள்ளி வீங்கிறைப் பணைத்தோள்;

மெத்தென் சாயல்; முத்துறழ் முறுவல்; பூங்குழைக்கு அமர்ந்த ஏந்து எழில் மழைக்கண்; மடவரல் மகளிர் பிடகைப் பெய்த செவ்வி அரும்பின் பைங்கால் பித்திகத்து அவ்விதழ் அவிழ்பதம் கமழப் பொழுது அறிந்து இரும்புசெய் விளக்கின் ஈர்ந்திரிக் கொலீஇ நெல்லும் மலரும் தூஉய்க் கைதொமுது மல்லல் ஆவணம் மாலை அயர:

(36-44) 2ー●ア:

வெள்ளி வள்ளி=வெள்ளிய சங்கு வளைகள் வீங்கு இறை=இறுக அணியப் .ெ ப ற் றி ரு க் கு ம் முன்

கையினையும். பனைத்தோள் -மூங்கில்போலும் தோளினையும் மெத்தென் சாயல் = மென்மைத் தன்மை வா ய், ந் த.

சாயலினையும். - முத்து உறல் முறுவல் = முத்தை ஒத்து முறுவலிக்கும்

பல்லினையும். பூங் குழைக்கு அழகிய மகரக் குழையின் அழகிற்கு. அமர்ந்த - பொருந்தின. ஏந்து எழில் = மிகச்சிறந்த அழகினையும். மழைக்கண் - அருள் உணர்வாம் குளிர்ச்சினையும் உடைய

கண்களையும்.

34