இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
பிரிவை அவர்கள் ஏற்படுத்தினார்கள். 1944 செப்டம்பர் மாதம் இந்த அணி துவங்கப்பட்டது.
மண்டேலா ஊக்கத்துடனும் சிரத்தையோடும் உழைத்தார். அவரது ஒழுங்குமுறைகளும் திட்டமிட்ட செயல்பாடுகளும் அனைவரின் கவனத்தையும் கவர்ந்தன. சகாக்களின் பாராட்டுதல்களைப் பெற்றன.
எனவே அவர் 1947 இல் இளைஞர் அணியின் செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஓயாத கடும் உழைப்பினாலும், இடைவிடாத பிரசாரத்தாலும் ஆப்பிரிக்க தேசியக் காங்கிரசின் இளைஞர் அணியினர் தேசியக் காங்கிரஸ் உறுப்பினர்களிடையிலும் தங்களது கொள்கைகளுக்கு ஆதரவு பெறுவது சாத்தியமாயிற்று.
16 • நெருப்பு மனிதன் நெல்சன் மண்டேலா