பக்கம்:நேசம்.pdf/149

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அன்புள்ள ஸ்நேகிதிக்கு143


"ஏனாம்’ ’ ‘சகுனம் சரியில்லை.” 'இதற்கெல்லாம் சகுனம் பார்க்கவேண்டியவன் நான் அல்லவா?’’ "மிஸ்டர்’’-இன்றுகூட உனக்கு என் பெயர் தெரியாது அல்லவா? 'நாலு காசு மலிவுக்கு ஆசைப்படாதீர்கள். சனியன் பிடித்த கட்டில் நான் ஏதேனும் ஆஸ்பத்ரிக்கு-’’ 'ஒ. ப்ளீஸ் ப்ளீஸ்..”* "நோ உங்களுக்கு கட்டில் கிடையாது.” 'ஒ. ப்ளீஸ்.” "'என் நேரத்தை வீணாக்காதீர்கள், குட்டை." வாசற்கதவை சாற்றக்கூட கவலைப்படாமல் விர்ரென்று மாடியேறிப் போய்விட்டாய். டீப்பாயில் இன்னொரு காபி ஏடு புடைக்க ஆரம்பித்து விட்டது. - காதல் என்பது சாம்பலா? அல்லது அதனுள் மறைந்து கொண்டிருக்கும் தணலா? அறியாமல் சாம்பலை அள்ளிவிட்டு உள்ளங்கையில் சுறீல்! அல்லது இரண்டுமேயா? அல்லது பூமிக்குள் புதைத்து வைத்த ஸ்புடமா? என் உள்ளேயே நீ புகுந்துவிட்டாய் என்று எனக்கு அப்போது நிச்சயமாய்த் தெரியாது. தகி த கி தகி அடுத்தபடியாக நாம் சந்தித்தபோது ஏழெட்டு மாதங் கள் ஏன் ஒரு வருடமே ஆகியிருக்குமோ?!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நேசம்.pdf/149&oldid=1403601" இலிருந்து மீள்விக்கப்பட்டது