பக்கம்:நேசம்.pdf/152

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

146லா. ச. ராமாமிர்தம்


ஒன்று சந்தேகமில்லை. நீ அசடு இல்லை. நாம் பாரில் இருந்து வெளிவந்த பொழுது இரவே வந்துவிட்டது. முற்றிய இரவு. பூந்தமல்லி ரோடில் கார்கள் பறந்தன. வெளிச்சங்கள் பிறந்தன. சிரித்தன. உன் வீடு அங்கே பக்கம்தான் வீட்டுக் கதவுப் பூட்டை சாவி போட்டுத் திறந்தாய். ஏன் வீட்டில் ஒருவருமில்லையா? நீ ஒண்டிதானா ராஜாங்கி உள்ளே ஏற்கனவே விளக்கு எரிந்துகொண்டிருந்தது. நீ என் பக்கம் திரும்பினாய். உன் விழிகள் கருந் திராட்ஷைகளாய்ப் பளபளத்தன. என் தோள் மேல் கை வைத்தாய். தோள் குமிழியை உன் விரல்கள் பிசைந்தன. மாடிக்குப் போவோமா? உன் குரல் மூச்சாம் அடங்கிய செவியில் மோதிற்று. கட்டிலைப் பார்க்கிறீர்களா?" 'நான்...நான்...”* மூச்சுத் திணறிற்று. 'நான் இது வரை லானோவிற்கு துரோகம் செய்ததில்லை" சிரித்தாய் 'ஆஹா லோ தோ கட்ஸ், உங்கள் லானோவை நீங்களே வைத்துக்கொள்ளுங் தன்.’’ என் மார்மேல் கை வைத்து என்னை வெளியே தள்ளினாய். கதவு படீரென்று என்மேல் முடிற்று. காதல் என்பது புற்றுநோயா? புற்று மண்ணா? உள்ளே பாம்பு பழமை ஆக ஆக குழல் விட்டுக்கொண்டு கடரும் உயரும் புற்று அல்லது பாம்பு அதைவிட்டுப் போன பின்னர். அதன் மேலிட்ட மஞ்சளிலும் குங்குமத்திலும் ஆளை மிரட்டிக்கொண்டிருக்கும் ஐதீகமா? லானோவிற்கும் எனக்கும் இடையே எங்கள் உண்தை ஒவ்வொரு தோலாய் உரிய உரிய உன் இடம் என்விட, வலுவாகிக்கொண்டே வந்துவிட்டது. -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நேசம்.pdf/152&oldid=1403604" இலிருந்து மீள்விக்கப்பட்டது