பக்கம்:நேசம்.pdf/154

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

148லா. ச. ராமாமிர்தம்


காதல் பாலூட்டி வளர்த்த பாம்பு. சமீபத்தில் 'காதல் எனும் துரோக நதி’ என்று ஒரு சிறுகதையைப் படித்தேன். ரெட்வt, ப்ளாக்ஸி, டெட்லி, நச்சுப்பொய்கை, தி: கோல்டன் ரிவர் என்கிறார்போல் துரோக நதி, அசரீரி: வாக்குப் போன்ற தலைப்பு. அப்படியும் இருக்குமோ அமலி? நாளைக்கு, நாளைக்கு-நாளை போகாமல் இருப் பேனோ நான் அந்தத் தில்லை நடராஜனைக் காணாமல் இருப்பேனோ, கிட்டப்பா குரல் கணிர்!-- கட்டுக்கழி படர்ந்த கருமுகில் காட்டுக்குள்ளே உன்னை விட்டுப் பிரிந்தேனடி கிளியே-வேதனைதான் பொறுக்கு தில்லை. மறுபடியும் கிட்டப்பா, எலும்பெல்லாம் மெழுகாகத் தளர்கிறது. நாளை நாளை என்று 25 30 வருடங்கள் இன்னும் கூடவோ என்னவோ! வேலையில் எட்டு முறை இடம் மாற்றலாகிவிட்டது. இது தவிர "கேம்ப்” இடம் இடமாய் சுற்றல்-இடையே பூரீகண்ட் பூரீதர் பூரீபால் வெறும் பூரீயில் ஒரு பாலா. ஒன்றிரண்டு பிரசவங்களுக்கு நான் பக்கத்தில் கூட இல்லை. கேம்ப். விசுவாமித்திரர் மேனகை ரவிவிர்மா படமொன்று பார்த்திருக்கிறாயா? ரிஷி ஒரு கையால் முகத்தை மூடிக் கொண்டு மறுகையால் ஒதுக்குகிறார். மேனகை எதிரே குழந்தையை நீட்டியவண்ணம் கேலி சிரிக்கிறாள். வேலைப் பாட்டில் என் கதி அப்படியிருந்தால் வீனோவுக்குத்தான் எப்படி இருக்கும்? யாரையும் குற்றம் சொல்விப் பயனில்லை. ஏற்கனவே எங்களுக்குள் இனம் இல்லை. எந்த மன வாழ்க்கையிலும் இதுதான் படிப்படியாகத் தெவிலும் யதார்த்தம். இனம் இல்லை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நேசம்.pdf/154&oldid=1403606" இலிருந்து மீள்விக்கப்பட்டது