பக்கம்:நேசம்.pdf/156

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

150லா. ச. ராமாமிர்தம்


"தோ பார் அமலி உன்னோடு வாழ்க்கையில் உடனே சொர்க்கத்தின் கதவுகள் திறந்து காத்திருக்கும் என்று நான் நினைக்கவில்லை. நினைக்கமாட்டேன். வேஷங்கள் இல் லாமல் உண்மையேனும் சற்று தலை தூக்குமல்லவா? தாம்பரம் போய் அங்கு ஏதேனும் ஒரு தூரப் பிரயாண வண்டியைப் பிடித்துவிடுவோம். எங்கேனும் ஒரு காட்டுப் பிரதேசத்தில் யாருக்கும் காணாமல் மறைந்துவிடுவோம். நம் இருவருக்கும் தவிர. ஆம். உனக்கு நான் எனக்கு நீ துணை என்று கடைசி யாகத் தெளியும் தோழமைதான் காதலின் உண்மை ஸ்வரூபமோ? இந்தத் தப்பியோடும் பிளினஸில் பைத்தியக்காரத்தனம் இருக்கிறது எனக்குத் தெரியும், ஆனால் கூடவே கொஞ்சம் ரொமான்சும் இருக்கிறது. இருந்தால் ஆகாதா? நீ அப்படி பழவந்தாங்கல் ஸ்டேஷனில் இறங்காவிட்டால் வராவிட்டால் என் கடிதம் உன்னிடம் சேரவில்லை. மற் றொரு முறை நாளைக்கு இதே இடத்தில், என்றெல்லாம் என்னை ஏமாற்றிக்கொள்ள மாட்டேன். இதற்கெல்லாம் மறு சான்ஸ் கிடையாது. எனக்குத் தெரியும். காதல் மிக மிக ரோஷமுள்ளது. சிகரெட் துண்டை குதி காலில் தேய்த்து நசுக்குவதுபோல் உன் நினைவை அறவே ஒழித்துவிட வேண்டியதுதான். இருக்கவே இருக்கிறாள். மீண்டும் லானோ. ஆனால் அப்படி முடியுமோ அமலி? நான் காத்திருப்பேன். ஐ லவ் யு அமலி. உனக்குத் தெரியும் ஐ ஹேவ் ஆல்வேஸ் லவ்ட்யு.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நேசம்.pdf/156&oldid=1403609" இலிருந்து மீள்விக்கப்பட்டது