பக்கம்:நேசம்.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தோடு مي புவனா, அபிதா, முரளி-மூவரும் வீட்டு வாசலுக் கெதிரே சின்ன குறட்டுக்கல்லில் அப்பா-அம்மா விளையாட்டு விளையாடிக் கொண்டிருந்தனர். அபிதா, தான்தான் அப்டாவாயிருப்பேனென்று சண்டி பண்ணினாள். மூவரில் அவள்தான் வயதில் சிறியவள். "அப்போ பாப்பா யார்?’ என்று புவனா கேட்டாள். மூவரில் அவள்தான் மூத்தவள். 娜 தி" 3 "நான்?’’-முரளி, தன் மார்பை சுட்டிக் காட்டிக் கொண்டான். ‘'நீ-அம்மா’’ 'ஏது, எல்லாம் தலைகீழ்ப் பாடமாயிருக்கே!" குரல் கேட்டு மூவரும் திரும்பினர். ஒரு கிழவர் பின்னால் நின்று கொண்டிருந்தார். நீண்ட மயிரை நெற்றியிலிருந்து .பின்னுக்குக் கோதிவிட்டிருந்தார். கறுகறுவென்று தாடி. "'என்ன, வீடு பூட்டியிருக்கு?’’ 'அம்மா, ஆபிஸ் போயிருக்கா?’’

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நேசம்.pdf/31&oldid=799006" இலிருந்து மீள்விக்கப்பட்டது