பக்கம்:நேசம்.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28லா. ச. ராமாமிர்தம்


"வழிப்போக்கன். தாகத்துக்கு ஜலம் கேட்கலாமென்று இந்த வீட்டுக்கெதிரே நின்றேன். வீடு பூட்டிக் கிடக்கு. அதற்குள் குழந்தைகள் விளையாட்டில் கவனம் மாறி விட்டது.' Oh, that is alright, G, 3.36063 &pgarðr எல்லோரும் ஊர்வலமாக நுழைந்தனர், பெரியவரைத் தவிர. அவர் வாசற்படிக்கட்டை ஒட்டி எழுப்பிய மேடை ஒன்றில் அமர்ந்துவிட்டார். 'ஏன், உள்ளே வாங்கோளேன்!” 'இல்லே, இங்கே காற்று ஜிலுஜிலுன்னு இருக்கு” உடையைக் கழற்றி எறிந்துவிட்டு, லுங்கி உடுத்துக் கொண்டு, வெளியே வந்து எதிர் மேடையில் அமர்ந்தான். உடம்பு, ஆவி கக்கிற்று. "உஸ், கிரி, காப்பிக்கு வழி இருக்குமா?’ என்று கூவினான். உள்ளேயிருந்தபடி, கையைச் சிலம்பம் ஆட்டினாள், இல்லையென்று. "நல்ல வீடய்யா இது. வரது வாரத்துக்கு ஒருநாள். அங்கே, நாயர் கடை டீயை விட்டால் வேறு கதியில்லை. ஊர் ஊராய் ஒடிப்போய் சம்பாதிச்சாலும், நம் வீட்டில் நமக்கு ஒரு முழுங்கு காப்பிக்கு, வாய், முகம் எல்லாம் திட மங்கல ஜோதி ஆயிடறது’’’ "புவனா ஆத்துக்குப் போய்ப் பாட்டியைக் கேட்டுப் பால் வாங்கிண்டு வா. கூடவே முரளியை அழைச்சுண்டு டோ. ஜே, உங்களுக்கு வேற்றாள் எதிரே நம் அழுக்கை அலசறத்துலே தனிக் குஷி இல்லையா?” "பின்னே என்ன, நீ மட்டும் உத்யோகத்துக்குப் போக வில்லை. நானும்தான் வேலை பார்க்கிறேன்-’’

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நேசம்.pdf/34&oldid=1403469" இலிருந்து மீள்விக்கப்பட்டது