இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
52லா. ச. ராமாமிர்தம்
மறுநாள் காலை, தகப்பனும் பிள்ளையும் சந்தித்ததுமே அவர்: "இன்னி ராத்ரி நான் ஊருக்குப் புறப்படறேன், 邻,必波 புறப்பட்டாகனும் பிள்ளை வியப்புடன் அவரை நோக்கினான். "என்னப்பா வந்து இன்னும் ஒருவாரம் முழுசா ஆகல்லே. அதுக்குள்ளே.... 'இல்லை எனக்குப் பிராயச்சித்தம் அக்கேதான் இருக்கு" அவன் திகைப்பு அதிகரித்தது. 'என்ன பிராயச்சித்தம், எதுக்குப் பிராயச்சித்தம்? எனக்கு ஒண்ணுமே புரியல்லியே!” அவர் குரல் அமைதியாகவும், பதில் தீர்க்கமாகவும்: வந்தன.
- உனக்குப் புரியாது."