பக்கம்:நேசம்.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ராம தர்மம்75


மாமனார். எப்படி அரண்டுபோயிருப்பார் என்பதை நினைத் துக்கொண்டேன். கலப்பையில் தட்டுப்பட்ட பெட்டியில் நான் கண்டெடுத்தது பேயா, ராக்ஷஸியா? இவளிடமிருந்து முன்னால் நம்மைக் கழற்றிக்கொள்ள வேண்டும்’ என்கிற தீவிர பயம் அப்போதுதான் அவருக்குத் தோன்றியிருக்கும். ஆனால் இவளைச் சமாளிக்கத் தக்கனாய் ஆண் இருக்க வேனும் என்பதற்காகத்தான் வில்லை முறிக்கும் நிபந்தனை யைக் கொணர்ந்தார். உண்மையில் அது சுயம்வரமா? நிபந்தனை வரம் ஒரு தினுசில் கட்டாய வரம். விதி வரம்.” 'மாருதி, இவள் மண் யாவும் விளைவதும் இவளில் தான். வளம் பெறுவதும் இவளில்தான். ஆனால் அத்தனை யையும் விழுங்குபவளும் இவள்தான். இவள் பயங்கரி, நான் கருவில் வளர்ந்து ஜனித்தேன். இவள் கர்ப்பவாலமே அற்றவள். காலவரையே அற்ற வயதைக் கடந்து இப்பிறவி யில் எனக்கு தாரம் சீதையென்று உருக்கொண்டிருக்கிறாள். இவள் என்னிலும் மிக, மிக மூத்தவள். இவள் உறவை என்னென்று நிர்ணயிப்பது? நெருப்புக் குளியல் இவளுக்கு திலாக் குளியல் கேட்ட இரு வரங்களில் வனவாச வரம் நிஜமானால் மற்ற வரம் பொய்யாகிவிடுமா? என் தம்பி நல்லவன். எனக்கு நா ட் ைட க் கொடுத்துவிட்டான் என்பதால், நாடு எனக்குச் சொந்தமாகிவிடுமா? அப்போது எனக்காக அவன் பாதுகாத்தான். இப்போது அவன் தருமத் தில் நான் அவன் சிம்மாசனத்தில் உட்கார்ந்துகொண்டிருக் கிறேன். ராஜதர்மத்தில் உனக்கு என்ன வரம் வேண்டும்?" என்று என் தந்தையே முன்வந்து கேட்ட அன்றே வரங்கள் கொடுக்கப்பட்டுவிட்டன. விவரங்கள் அப்போதே தெரி விக்கப்படவில்லை: அவ்வளவுதான். உண்மையில் அவை: பிறகு வரங்களேயில்லை, என் தாய், என் தந்தையிடம் விட்டு வைத் திருந்த கடன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நேசம்.pdf/81&oldid=1403510" இலிருந்து மீள்விக்கப்பட்டது