பக்கம்:நேரு தந்த பொம்மை.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கண்ணைப் போல நாட்டினைக்
காத்து வளர்த்து வந்தவர்;
எண்ணம், வாக்கு செயலிலே
என்றும் தூய்மைஉடையவர்.
[இன்று]


பார தத்துக் குழந்தைகள்
பண்பு பெற்றுச் சிறக்கவே
நேரு கனவு கண்டனர்;
நிறைவு செய்வோம்
நாமுமே. [இன்று]


பிறந்த நாள்


குழந்தை யெல்லாம் கூடுவோம்;
கூடிக் குதித்தே ஆடுவோம்;
மழலை மொழியில் பாடுவோம்;
மகிழ்ந்து தாளம் போடுவோம்.

“குழந்தை யோடு பழகவும்,
குழந்தை யோடு பேசவும்.
குழந்தை யோடு ஆடவும்
கொள்ளை ஆசை உள்ளது.”

11