பக்கம்:நேரு தந்த பொம்மை.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

என்று சொன்ன நேருவை

இந்த நாடு பெற்றநாள்.

என்றும் நமது நெஞ்சிலே

இருக்கும் நேரு பிறந்த நாள்.

'எனது பிறந்த நாளையே

இன்ப மூட்டும் குழந்தைகள்

தினமாய்க் கொள்வோம்’ என்ற நம் தேசத் தலைவர் பிறந்தநாள்.

இந்தி யாவில் மட்டுமா?

இல்லை, இல்லை, உலகிலே

எந்த நாட்டுக் குழந்தையும்

இவரைப் போற்றும் நல்ல நாள்.

தேச நலனை எண்ணியே

தினமும் பாடு பட்டவர்;

ஆசை யாக நாமெலாம்

அழைக்கும் 'மாமா' பிறந்தநாள்.

நாட்டை ஆளும் தலைவராய்

நாமும் ஆக நல்வழி

காட்டிச் சென்ற நேருவின்

கதை படித்து மகிழுவோம்.

12