இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
என்று சொன்ன நேருவை
- இந்த நாடு பெற்றநாள்.
என்றும் நமது நெஞ்சிலே
- இருக்கும் நேரு பிறந்த நாள்.
'எனது பிறந்த நாளையே
- இன்ப மூட்டும் குழந்தைகள்
தினமாய்க் கொள்வோம்’ என்ற நம் தேசத் தலைவர் பிறந்தநாள்.
இந்தி யாவில் மட்டுமா?
- இல்லை, இல்லை, உலகிலே
எந்த நாட்டுக் குழந்தையும்
- இவரைப் போற்றும் நல்ல நாள்.
தேச நலனை எண்ணியே
- தினமும் பாடு பட்டவர்;
ஆசை யாக நாமெலாம்
- அழைக்கும் 'மாமா' பிறந்தநாள்.
நாட்டை ஆளும் தலைவராய்
- நாமும் ஆக நல்வழி
காட்டிச் சென்ற நேருவின்
- கதை படித்து மகிழுவோம்.
12