பக்கம்:நேரு தந்த பொம்மை.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.


நவம்பர் 14

நவம்பர் மாதம் பதினான்கு
நல்ல நாளாம் நாட்டிற்கு.
ஜவஹர் பிறந்தது அந்நாளே.
சகலரும் போற்றும் பொன்னாளே!
பிறந்த நாளில் ஜவஹர்லால்
பெரிதும் மகிழ்ச்சி கொண்டிடுவார்.
உறவினர் எல்லாம் அவர் வீட்டில்
உற்சா கத்துடன் கூடிடுவார்.
குழந்தை நேரு ஒருதட்டில்,
கோதுமைத் தானியம் மறுதட்டில்
அளவாய் வைத்து நிறுப்பார்கள்
அன்று காலை தராசினிலே
இப்படி நிறுத்த தானியத்தை
ஏழைக ளுக்கு வழங்கிடுவர்.
அப்புறம் நேரு புத்தாடை
அணிந்தே மிகவும் மகிழ்ந்திடுவார்.

15