இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
வேந்தர் போல நடந்திடுவார்;
மிகவும் பெருமை கொண்டிடுவார்;
‘நான்தான் இந்த விழாவிற்கே
நாயகன்’ என்றே எண்ணிடுவார்.
வகைவகை யான பரிசுகளை
வந்தவர் தருவார் ஜவஹரிடம்.
மிகமிக நன்றி' என்றிடுவார்;
விழுந்தே வணக்கம் செலுத்திடுவார்.
தின்றிடப் பற்பல பண்டங்கள்
செய்திடு வார்கள் சுவையாக.
நண்பர்கள், உறவினர் பலருடனே
நன்றாய் உண்டு களித்திடுவார்.
“என்றன் பிறந்த நாள்தன்னை
இதுபோல் அடிக்கடி கொண்டாட
அன்னை, தந்தை இருவரையும்
ஆசை யாக நான் கேட்டேன்.
அதிகம் ஆகுமே என்வயது
அடிக்கடி பிறந்த நாள்வந்தால்!
இதனை இளமையில்அறியேனே!'
என்றார் பின்னர் ஜவஹருமே”
16