பக்கம்:நேரு தந்த பொம்மை.pdf/22

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



வேலை பார்க்கும் ஆட்களை
மிரட்டித் தந்தை கேட்டனர்:
“தோலை உரிப்பேன்; உண்மையைச்
சொல்வீர்,” என்றே இரைந்தனர்.

ஆடி ஓடி வெளியிலே
ஆனந் தமாய்த் திரிந்தபின்
வீடு வந்த ஜவஹரோ
விவரம் புரிந்து கொண்டனர்.

சீறு கின்ற தந்தையைச்
சிறுவர் நேரு பார்த்ததும்,
நேரில் எதுவும் பேசவே
நெஞ்சில் துணிச்சல் இல்லையே!

“நானே பேணு எடுத்தவன்;
நானே தவறு செய்தவன்:
பேனா எடுத்த என்னையே
பெரிதும் மன்னித் தருளுவீர்”

என்று கூறத் துடித்தனர்.
ஏனோ தொண்டை அடைத்தது.
கண்கள் சிவந்த தந்தையைக்
கண்டு கலக்கம் கொண்டனர்!

19