பக்கம்:நேரு தந்த பொம்மை.pdf/23

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வீடு முழுதும் தேடினர்,
வேலை யாட்கள் கடைசியில்,
தேடிப் பேனா எடுத்தனர்!
சிறுவர் நேரு அறையினில்!

உண்மை அறிந்த மோதிலால்
ஓடி வந்தார், கோபமாய்;
சின்னப் பையன் என்பது
சிறிது கூட நினைவில்லை.

கட்டி முத்தம் கொடுப்பவர்,
'கண்ணே, மணியே’ என்பவர்,
பட்டுப் போன்ற உடலிலே
'பட்பட்' டென்றே அடித்தனர்.

சிவந்த உடலோ மிகமிகச்
சிவந்து போச்சே, அடியினால்!
ஜவஹர் என்னும் இளந்தளிர்
சருகு போலச் சுருண்டது!

அழுது கொண்டே ஜவஹரும்
அன்னை அருகில் ஓடினர்;
கழுத்தைக் கட்டிக் கொண்டனர்;
கண்ணீர் வழிய நின்றனர்.

20