பக்கம்:நேரு தந்த பொம்மை.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.


குதிரைச் சவாரி

குழந்தை யாக இருந்த போது
ஜவஹர் லாலுடன்
குதிரைக் குட்டி செல்ல மாக
இருந்து வந்தது
அழகு மிக்க குதிரைக் குட்டி
அதனில் ஏறியே.
அலகா பாத்து நகரைச் சுற்றித்
தினமும் வருவாரே.
அன்று மாலை குதிரை மீது
ஜவஹர் ஏறியே
ஆனந் தமாய் ஊரை யெல்லாம்
சுற்றும் போதிலே,
என்ன அந்தக் குதிரைக் குட்டி
நினைத்து விட்டதோ!
என்றும் இல்லா வேகத் தோடே
ஓட லானது!

24