பக்கம்:நேரு தந்த பொம்மை.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அழகு மிக்க தோட்டம் தன்னில்
அருமை நீச்சல் குளமாம்.
பழகு வார்கள் நீந்து தற்கே
பலரும் அங்கே தினமும்.

பத்து வயது ஜவஹர் நீந்தப்
பழகிக் கொண்டார் நன்கு.
நித்தம் இரண்டு மூன்று முறைகள்
நீந்தி மகிழ்வார் அங்கு .

நேரு வோடு நண்பர் சிலரும்
நீந்து வார்கள் குளத்தில்;
யாரும் செய்யா வித்தை யெல்லாம்
நேரு செய்வார் அங்கே.

தண்ணீ ருக்குள் மூழ்கி மூழ்கி
‘தம்’ பிடித்தே இருப்பார்.
என்ன நேர்ந்த தென்று நண்பர்
எண்ணும் போதே எழுவார்.

மூச்சை அடக்கிப் பலகை போல
மிதப்பார் நீரின் மீதே!
நீச்சல் குளத்தைச் சுற்றி மக்கள்
நின்று பார்த்து மகிழ்வார்.

28