பக்கம்:நேரு தந்த பொம்மை.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வசதி பலவும் நிறைந்த நல்ல
வளமை யான வீடு.
அசதி இல்லா நேரு வாழ்ந்த
அழகு கொஞ்சும் வீடு.

இந்த நாடே எனது வீடு,
என்று நினைத்த நேரு.
சொந்த வீட்டை நாட்டி னுக்கே
சொந்த மாக்கி விட்டார்!

அந்தப் பெரிய மாளிகை
ஆனந்த பவனமாம்.
இந்தி யாவில் மட்டுமா?
எங்கும் தெரிந்த ஒரு பெயர்!

29