பக்கம்:நேரு தந்த பொம்மை.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
வீட்டிலே படிப்பு


“பள்ளிக் கூடம் செல்ல வேண்டாம்”
என்று மோதிலால்
பத்து வயது முடிந்த மகனைப்
பார்த்துக் கூறினர்.
“வெள்ளைக் காரர் ஒருவர் நமது
வீட்டில் தங்கியே
விரும்பும் பாடம் யாவும் கற்றுத்
தருவார்,” என்றனர்.

பிள்ளை மிகவும் ஆர்வத் தோடு
படிக்கத் தொடங்கவே,
புரூக்ஸ் என்னும் ஆசான் மிகவும்
மகிழ்ச்சி கொண்டனர்.
கல்வி தன்னைச் சிறந்த முறையில்
கற்றுத் தந்தனர்.
கருத்தில் பதியும் வகையில் நன்கு
எடுத்துக் கூறினர்.

சிறுவர் நூல்கள் பலவும் நேரு
படித்து மகிழ்ந்தனர்;
சிறந்த உலக இலக்கி யங்கள்
விரும்பிக் கற்றனர்.

34