பக்கம்:நேரு தந்த பொம்மை.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அருமை யான கவிதை நூல்கள்
ஆழ்ந்து படித்தனர்.
அவற்றைப் படித்துச் சுவைக்கும் வகையில்
பயிற்சி பெற்றனர்.

விந்தை மிக்க விஞ்ஞா னத்தை
விரும்பும் வகையிலே
வேடிக் கையாய்க் கூறி புரூக்ஸ்
ஆர்வம் ஊட்டினார்.

அந்த வீட்டில் ஆய்வுக் கூடம்
ஒன்றும் அமைத்தனர்.
அதிலே தினமும் சோத னைகள்
நடத்திப் பார்த்தனர்.
மூன்று வருடம் இந்த வகையில்
கல்வி கற்றனர்.
மேதை யாக விளங்க நல்ல
பாதை அமைத்தனர்.

35