பக்கம்:நேரு தந்த பொம்மை.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



மாத முழுதும் ஒருநாள் கூடப்
பேசி டாதவர்
மன்றத்திற்கே அபரா தந்தான்
செலுத்த வேண்டுமாம்.
ஆத லாலே மேடை ஏறிப்
பேசி டாத நம்
அருமை நேரு அபரா தத்தைத்
தொடர்ந்து செலுத்தினார்.

சொந்த நாடு திரும்பி வந்த
பிறகு மக்களின்
துயரம் யாவும் கேட்டுக் கேட்டுத்
துடிது டித்தனர்.
அந்தச் சமயம் மக்களி டத்தில்
சென்று தினமுமே
ஆறு தல்கள் கூறும் வகையில்
பேசி வந்தனர்.

கூச்சம் கொஞ்சம் கொஞ்ச மாகக்
குறைந்து வந்தது.
கூட்டம் அதிகம் அதிக மாகப்
பெருகி வந்தது.

42