இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
நேரு காரில் வருவதை
நேரில் காணும் ஆசையால்,
ஊரி லுள்ளோர் அனைவரும்
ஒன்று திரண்டு வந்தனர்.
தெருவில் நேரு செல்கையில்
சின்னச் சின்னப் பொம்மைகள்
ஒருவர் விற்கக் கண்டனர்;
உடனே கீழே இறங்கினர்.
அந்தப் பொம்மைக் காரரின்
அருகில் நேரு சென்றனர்;
"இந்த அழகுப் பொம்மைகள்
என்ன விலையோ?” என்றனர்.
47