பக்கம்:நேரு தந்த பொம்மை.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



நேரு தலையில் புறா


டில்லி நகரில் நேஷனல்
ஸ்டேடி யத்தில் சிறுவர்கள்
எள்ளு விழவும் இடமின்றி
இலட்சக் கணக்கில் கூடினர்.
இன்று மிகவும் சிறந்தநாள்:
எங்கள் நேரு பிறந்தநாள்!"
என்று கூறி ஆடினர்;
இன்பம் பொங்கப் பாடினர்.
காரில் நேரு வருவதைக்
கண்ட வுடனே சிறுவர்கள்,
நேரு வாழ்க!” என்றனர்;
நீண்ட நேரம் முழங்கினர்.
“யுத்தம் நீங்கி உலகெலாம்
ஒன்று கூடி வாழவே
நித்தம் உழைத்த நேருவே,
நீடு வாழ்க!” என்றனர்.

49