பக்கம்:நேரு தந்த பொம்மை.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

எந்த நிகழ்ச்சியும், அந்தச் சமயம்
இல்லை; அதனால
"எங்கே சென்றார்? எங்கே சென்றார்?”
என்றே கேட்டனரே.
வந்தவர் போனவர் காதில் இந்தச்
சேதி விழுந்திடவே,
மாநகர் எங்கும் காட்டுத் தீபோல்
பரவிட லானதுவே!

காவலர் பலரும் நகரம் முழுவதும்
தேடிப் பார்த்திடவே,
கடைசியில் நேருவைக் கண்டு பிடித்தனர்;
கண்டு பிடித்தனரே!
ஆவல் பொங்கப் பூங்கா ஒன்றில்
குழந்தைகள் நடுவினிலே
அடடா, நேரு இருந்தது கண்டு
அசந்தே போயினரே!

மழலை மொழியைக் கேட்டுக் கேட்டு
மகிழ்ச்சியில் மூழ்கினரே.
மறந்தனர் இந்த உலகம் யாவையும்
மறந்தே போயினரே.

52