பக்கம்:நேரு தந்த பொம்மை.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.


குழந்தைகள் அந்தப் பூங்கா நடுவில்
கூடிப் பாடிடவே
குஷியாய் நேருவும் குழந்தை போலவே
ஆடிப் பாடினரே.

கோடை வெயிலைப் போன்றது என்றும்
அரசியல் உலகம்தான்.
குளுகுளு தென்றல் காற்றைப் போன்றது
குழந்தைகள் உலகம்தான்.
தேடியே வந்தார் குழந்தைகள் உலகைத்
திருட்டுத் தனமாக.
தெரிந்தது நேருவின் குழந்தை உள்ளம்
தெள்ளத் தெளிவாக!

53