பக்கம்:நேரு தந்த பொம்மை.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நேரு மாமாவும் குழந்தைக்கவிஞரும்

1958, நவம்பர் 14.
நேரு மாமா பிறந்த நாள்.
அந்த நல்ல நாளில், நேரு மாமாவைக் காணவும், அவருடன் பேசவும் ஒரு வாய்ப்புக் கிடைத்தது, குழந்தைக் கவிஞருக்கு !
ஆம், 1956-ல் அனைத்து இந்தியப் புத்தகக் காட்சியை டில்லியில் நடத்தியது சாகித்ய அகாதமி. அங்கே தமிழ்ப் பிரதிநிதியாகச் சென்றிருந்தார் குழந்தைக் கவிஞர். நேரு மாமா, தமது பிறந்த நாளில் அக்காட்சியைக் காண வந்தார். தமிழ்ப்பகுதிக்கு அவர் வத்தபோது எடுத்த புகைப்படத்தான் மேலே உள்ளது.