24 பசி கோவிந்தம்
கேட்டால் கவலை தீர்ந்துவிடும் அப்பனே, கவலை தீர்ந்துவிடும்-கேட்காமல் கவலைப்படு!-அப்பொழுது தான் அன்பு மனைவியையும் ஆசைக் குழந்தையையும் உன்னுல் துறக்க முடியும்; அடுத்த வேளைச் சாப் பாட்டையும் அதற்கு வேண்டிய காசையும் உன்னுல் மறக்க முடியும்?
என்ன யோசிக்கிருய், ஏன் திரும்பிப் பார்க் கிருய்?-அழகும் அற்புதமும் நிறைந்ததுதான் இந்த உலகம்; இல்லையென்று நாங்கள் சொல்லவில்லை. ஆனல் அதற்கும் உனக்கும் சம்பந்தம் கிடையாது; அந்தச் சம்பந்தம் எனக்கும் என் ஆசானுக்கும் மட்டுமே உண்டு-இது உலக மகா ரகசியம்!-இதைப் புரிந்து கொள்ள முயற்சி செய்யாமல் சதா அந்த உலகத்தைப் பற்றியே நீ கவலைப்பட்டுக் கொண்டிருக்க வேண்டுமென்ருல் என்ன செய்ய வேண்டும்?-மறுபடி யும் சொல்கிறேன் :
நீ எங்கிருந்து வந்தாய்?-அம்மாவைக் கேட் காதே!
நீயாகவே உண்டாயைா? - அப்பாவைக் கேட் காதே!
கேட்டால் கவலை தீர்ந்துவிடும். கேட்காமல் கவலைப்படு, கவலைப்படு, கவலைப்பட்டுக் கொண்டே
இரு!