பக்கம்:பசி கோவிந்தம்.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44 பசி கோவிந்தம்

மல்லவா? - அதற்காகத்தான் ரஸத்தைக் கொஞ்சம் கைவிட்டிருக்கிறேன்; மன்னிக்க.

மற்றவர்கள் வேண்டாம், வேண்டாம் என்று சொல்லவில்லையே என்பதற்காக ரீ வேண்டும், வேண்டும் என்று சொல்லிக்கொண்டிருக்காதே!அவர்கள் விஷயம் புரியாமல் வாழ தாகங் கொண்டு விட்டவர்கள். அதனுல்தான் ஆயிரம்வேலி நிலம் இருக் தாலும் இன்னும் ஒர் ஆயிரம் வேலி கிலம்:கிடைக்காதா, அவசரமாகப் போவதற்கு ஆகாய விமானம் இருந் தாலும் அதையும் மிஞ்சக் கூடிய அசகாய விமானம் ஏதாவது வராதா என்று எண்ணியெண்ணி, எப் பொழுது பார்த்தாலும் கஷ்டத்துக்கு மேல் கஷ்டம் அனுபவித்துக் கொண்டிருக்கிருர்கள் :- இதற்குக் காரணம் என்ன?-சாகதரகங் கொள்வதிலுள்ள சுகம் அவர்களுக்குத் தெரியாதது தான்!-அந்தச் சுகத்தைக் கண்டவர்கள், அந்தச் சுகத்தைக் கண்டவர்கள்-ஒ, யாரும் இல்லையா? - அதனுலென்ன, சொன்னுல் கம்புவதை விட்டுவிட்டு முதலில் நீ செத்துக் காட்டு; பின்னுல் கான் சாகிறேன்!” என்று நீங்கள் சொல்லவா போகிறீர்கள்?-அதற்குத்தான் மரணத்தை மரணம்’ என்று சொல்லாமல் மோட்சம் என்று சொல்லி நாங்கள் அப்போதே தப்பித்துக் கொண்டு விட்டோமே -நீங்கள் போங்கள், மோட்சத்துக்கு; சந்தோஷமாகப் போங்கள், மோட்சத்துக்கு; சஞ்சலமில்லாமல் போங் கள், மோட்சத்துக்கு-காங்களும் உங்களுடன் மோட் சத்துக்கு வந்துவிட்டால் உங்களுக்குப் பின்னல் இருப்பவர்களை யார் மோட்சத்துக்கு அனுப்புவது?போங்களடா கண்களா, போங்கள்; எங்களைத் திரும்பிப் பார்க்காமல், ஏன்?’ என்று ஒரு வார்த்தைகூடக் கே.காமல் போங்களடா கண்களா, போங்கள்!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பசி_கோவிந்தம்.pdf/46&oldid=590910" இலிருந்து மீள்விக்கப்பட்டது