பசி கோவிந்தம் 65
விட்டதே! -காம் அதைத் தீர்க்க வேண்டாமா?அதனுல்தான் சொன்னதையே திருப்பித் திருப்பிச் சொல்லவேண்டி யிருக்கிறது; குழப்பியதையே திருப்பித் திருப்பிக் குழப்பவேண்டி யிருக்கிறதுவேறு வழி?
3O
விஞ்ஞானம் தெரியாத அஞ்ஞானிகள் சிலர் ஐம்பூதங்களைப் பற்றி ஆராய்வதே விஞ்ஞானம்’ என்று கருதுகின்றனர். அது தவறு; ஐம்புலன்களைப் பற்றி ஆராய்வதே விஞ்ஞானம்; அதுவே மெய்ஞ் ஞான முங்கூட.
அஞ்சும் உன்னே க் கெஞ்சும்,
அசைந்தால் கொஞ்சம் மிஞ்சும்! கொஞ்சும் வாயும் மூக்கும்
கண்ணுங் காதும் போக, எஞ்சி யிருக்கும் ஒன்ருல்
என்ன துன்பம், துன்பம்! அஞ்ச வேண்டாம், அடக்கு!
அதுவே இன்பம், இன்பம்!
அது எப்படி இன்பமாகும்?' என்று அவசரப் பட்டுக் கேட்காதே!-ஸ், அடக்கு - ரகசியமாகச் சொல்கிறேன், அடக்கென்ருல் அடக்கு ! - உனக் காக நான் அப்படிச் சொல்லவில்லை ; உனக்குத் தான தருமம் செய்பவர்களுக்காக அப்படிச் சொல்கிறேன்