பக்கம்:பசி கோவிந்தம்.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

யும் ஒன்றே; இரண்டல்ல பசி முத்தினல் பக்திக்கு அவசிய மில்லை; புலன்கள் அனைத்தும்--ஏன், கடைசி மூச்சு உள்பட -தாமாகவே அடங்கிவிடும். 'தத்துவம் இதுவே!

'உண்மை’ என்னவென்ருல் மண், விண், நீர், நெருப்பு, காற்று ஆகிய பஞ்ச பூதங்களின் சேர்க்கையே இவ்வுலகம். இதனுள் வாழும் உயிர்களும் அப்படியே. பிறப்பினால் பஞ்ச பூதங்கள் சேருகின்றன; இறப்பினால் பஞ்ச பூதங்கள் பிரிகின்றன. அவ்வாறு பிரியும் மண் மண்ணுேடும், விண் விண்ணுேடும், நீர் நீரோடும், நெருப்பு நெருப்போடும், காற்று காற்ருேடும் கலந்து எந்தச் சூன்யத்திலிருந்து மனிதன் வந்தானே, அதே சூன்யத்தில் அவனேக் கொண்டு போய்ச் சேர்த்துவிடுகின்றன. இதற்குப் பின் இல்லாத ஒன்றைத்தான் மையமாக வைத்துப் பாவமென் றும் புண்ணியமென்றும், நரகமென்றும் மோட்சமென்றும் சொல்லி ஆசான்களும் அடியான்களும் கதைத்து வரு கிரு.ர்கள்.

இந்தக் கதையை நீங்கள் நம்பவில்லையென்ருல், அவர் களுடைய கதி அதோக திதான்;--அதற்குப்பின் இங்கே சனதனமும் இருக்காது; சாஸ்திரங்களும் இருக்காது. பாவமும் இருக்காது; புண்ணியமும் இருக்காது. நரகமும் இருக்காது; மோட்சமும் இருக்காது - இத்தகைய நிலை மைக்கு நீங்கள் இடங்கொடுத்தால் என்ன ஆகும்?'உழைப்பவன் வாயில் சோறு; உழைக்காதவன் வாயில் மண்ணு!’ என்று மக்கள் அனைவரும் தங்களைத் தாங்களே நம்ப ஆரம்பித்துவிடுவார்கள். அப்படி நம்ப ஆரம்பித்து விட்டால் இந்துமதமே ஆட்டங் காண ஆரம்பித்துவிடும். அதைக் காத்துத் தங்களையும் காத்துக் கொண்டு வரும் மடாதிபதிகளின் நெற்றியில் விபூதிக்குப் பதிலாக வியர் வையும், அவர்களுடைய கையில் ருத்திராrத்திற்குப் பதிலாக மண் வெட்டியும் இருக்கவேண்டிய அவசியம் நேர்ந்துவிடும்-இந்த அபாயத்தைத் தவிர்ப்பதற்காகத்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பசி_கோவிந்தம்.pdf/8&oldid=590872" இலிருந்து மீள்விக்கப்பட்டது