பக்கம்:பச்சைக்கனவு.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாற்கடல் O 95

எல்லாரும் எனக்குப் புதிசு, வாயில் முன்றானை நுனியை அடைச்சுண்டு கிணற்றடிக்கு ஒடிப்போயிட்டேன்.

எத்தனை நாழி அங்கேயே உட்காந்திருந்தேனோ அறியேன். -

'என்னடி குட்டீ, என்ன பண்றே?எனக்குத் துக்கிப் போட்டது. அம்மா எதிரே தின்னுண்டிருந்தாள். உங்கம்மா செக்கச்செவேல் என்று நெற்றியில் பதக்கம் மாதிரி குங்குமமிட்டுக்கொண்டு கொழ கொழன்னு பசுப்போல் ஒரொரு சமயம் எவ்வளவு அழகாயிருக்கிறார்:

'ஒண்னுமில்லையே அம்மா!' என்று அவசரமாய்க் கண்ணைத் துடைத்துக் கொண்டேன். ஆனால் மூக்கை உறிஞ்சாமல் இருக்க முடியவில்லை.

'அடாடா! கடுஞ் ஜலதோஷம். மூக்கையும் கண்ணை யும் கொட்டறதா? ராத்திரி மோர் சேர்த்துக்காதே' (கபடும் கருணையும் கண்ணில் கூடி அம்மா கண்ணைச் சிமிட்டும்போது, அதுவும் ஒரு அழகாய்த்தானிருக்கிறது!) 'என்னவோ அம்மா, புதுப் பெண்ணாயிருக்கே; உன் உடம்பு எங்களுக்குப் பிடி படறவரைக்கும், உடம்பை ஜாக்கிரதையாப் பார்த்துக்கோ- அட; குட்டி இதென்ன இங்கே பாருடி!'

அம்மா ஆச்சரியத்துடன் கிணற்றுள் எட்டிப் பார்த்தார். அவசரமாய் நானும் எழுந்து என்னென்று பார்த்தேன்; ஆனால் எனக்கு ஒன்றும் தெரியவில்லை.

'ஏ குட்டி, எனக்குத்தான் கண்சதை மறைக்கிறதா? கிணற்றில் ஜலம் இருக்கோ?”

"இருக்கிறதே!' 'குறைஞ்சிருக்கா?" 'இல்லையே, நிறைய இருக்கே!'

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பச்சைக்கனவு.pdf/104&oldid=590762" இலிருந்து மீள்விக்கப்பட்டது