பக்கம்:பச்சைக்கனவு.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

102 0 லா. ச. ராமாமிருதம்

ஒரோரு சமயம் அம்மா சொல்வதைப் பார்த்தால், என்னவோ தாங்கள் அஞ்சு பேரும் வெறுமென தின்று தெறித்து வளைய வருகிற மாதிரி நினைத்துக்கொள்ளலாம். ஆனால் இந்த வீட்டுக்கு எத்தனை நாட்டுப் பெண்கள் வந்தாலும், அத்தனை பேருக்கும் மிஞ்சி வேலையிருக்கிறது. சமையலை விட்டால், வீட்டுக் காரியம் இல்லையா, விழுப்புக் காரியம் இல்லையா, குழந்தைகள் காரியம் இல்லையா, சுற்றுக் காரியம் இல்லையா? புருஷாளுக்கே செய்யற பணிவிடைக் காரியங்கள்,...... இதெல்லாம் காரியத்தில் சேர்த்தியில்லையா? இந்த வீட்டில் எத்தனை பேர்கள் இருக்கிறார்களோ அத்தனை பந்திகள். ஒவ்வொத்தருக்கும் சமயத்துக்கு ஒரு குணம். ஒருத்தருக்குக் குழம்பு, ரணம், மோர் எல்லாம் கிண்ணங்களில் கலத்தைச் சுற்றி வைத்தாக வேண்டும்; ஒருத்தருக்கு எதிரே நின்று கொண்டு கரண்டி கரண்டியாய்ச் சொட்டியாக வேண்டும். நீங்களோ மெனன விரதம்! தலை கலத்தின்மேல் கவிழ்ந்து விட்டால் சிப்பலைச் சாய்க்கக்கூட முகத்துக்கும் இலைக்கும் இடையில் இடம் கிடையாது; ஒருத்தர் சதா சளசனா வளவளா கலத்தைப் பார்த்துச் சாப்பிடாமல் எழுந்த பிறகு இன்னும் பசிக்கிறதே, ரஸம் சாப்பிட்டேனோ? மோர் சாப்பிட்டேனோ? என்று சந்தேகப்பட்டுக் கொண்டே இருப்பார். குழந்தைகளைப் பற்றியோ சொல்ல வேண்டாம்,

எல்லோர் வீட்டிலும் தீபாவளி முந்தின. ராத்திரி யானால் நம் வீட்டில் மூணு நாட்களுக்கு முன்னதாக வந்து விட்டது. அரைக்கிறதும், இடிக்கிறதும், கரைக்கிறதுமாய் அம்மா கை எப்படி வாலிக்கிறது? மைஸஅர்ப்பாகு கிளறும் போது கம்மென்று மணம் கூடத்தைத் தூக்குகிறது. நாக்கில் பட்டதும் மணலாய்க் கரைகிறது. அது மணல் கொம்பா, வெண்ணையா? எதை வாயில் போட்டாலும் உங்களை நினைத்துக் கொள்வேன். நீங்கள் என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்? மெளனம் ஒன்றைத் தவிர வேறெதைத் தனியாய் அதுபவிக்க முடியும்? மெளனம் கூட

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பச்சைக்கனவு.pdf/111&oldid=590769" இலிருந்து மீள்விக்கப்பட்டது