பக்கம்:பச்சைக்கனவு.pdf/143

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

134 0 லா. ச. ராமாமிருதம்

அப்புறம் ஊர் உருப்படலேங்க, மாத்தி மாத்தி ஏதாவது நேந்துட்டிருந்தது. பெய்யற மழை கூடப் பெய்யல்லே, பயிர் எல்லாம் செத்துப் போச்சு. வாந்தி பேதி வேண்டிய பேரை வாரிக்கிட்டுப் போச்சு, இருக்கிறவங்க ஒவ்வொத்தரா கயண்டுக்கிட்டாங்க, எல்லோருக்குமே ஒரு கிலி பிடிச்சுப் போச்சு.

ஊரிலே பொங்கலன்னிக்கு, புதுப்பானையிலே பொங்கல் வேகல்லேன்னா அப்புறம் என்னங்க? நீங்களே சொல்லுங்க, நம்பிக்கை பூட்டுதுன்னா அப்புறம் என்ன இருக்குது?”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பச்சைக்கனவு.pdf/143&oldid=590801" இலிருந்து மீள்விக்கப்பட்டது