சாவித்ரி c. 175
இதோ கூடத்தில் பேராண்டி தொண்டையைக் கிழிச்சுண்டு கத்தறது காதைப் பொளிகிறது. அவனுக்குப் பசிவேளை வந்துவிட்டது. ஆனால் சிவகாமுவுக்கு மாத்திரம் ஏன் தெரியமாட்டேன் என்கிறது? ரெண்டு கண்ணுக்கு நாலு கண்ணாகக் கண்ணாடி வேறே போட்டுண்டிருக்கிறாளே!
- *
'சிவகாமூ! ஏ. சிவகாமூ- ஊ...!
"இதோ பாருங்கோ, முகூர்த்த வேளை நெருங்கி விட்டது. நீங்கள் இது மாதிரியெல்லாம் எழுந்திருந்து எழுந்திருந்து நடுவில் போய்க்கொண்டிருக்கக்கூடாது' என்றார் சாஸ்திரிகள்.
"சரிதாங்காணும். நீங்கள் இட்டிலி காபி சாப்பிட்டே களா?'
'பார் சாவித்திரி மாமிக்கு உடம்பு படகுபோல் இருந்தாலும் பந்துபோலத்தான் ஓடி விளையாடுகிறாள்:
"என்ன இருந்தாலும் கல்யாணப் பெண் இல்லையா?" 'சிவகாமூ! ஏ சிவகாமூ- ஊ- ஊ:
பார்த்தீர்களா? பார்க்காவிட்டால் எல்லாரும் பார்த்துக்கொள்ளுங்கள். காது வரைக்கும் வாய் கிழியற கல்யாணப் பெண்ணை இந்தக் கல்யாணத்தில்தான் நீங்கள் எல்லாரும் பார்க்கலாம்.'
கொல்லென்று சுற்றும் ஒரு சிரிப்பு விஷ்ணுசக்கரம் போல் சுழன்று எழுந்தது. -
"சுந்தாதானே இப்போ பேசினது?"
'இதோ இருக்கிறேன், மாமி.”
"சுந்தாதான் இப்படிப் பேசுவாளென்று எனக்குத் தெரியுமே. என்னடி செளக்கியமா? பழைய குறும்பெல்லாம் இன்னும் போகவில்லையா?”