பக்கம்:பச்சைக்கனவு.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24 ) லா. ச. ராமாமிருதம்

"நான் ஒரு பாவி-' என்றேன். மறுபடியும் விழித்தாள்.

'இது ஒரு புண்ணிய நாடு, காரைக்காலம்மையார், மங்கையர்க்கரசி, சக்குபாய், மீராபாய், அகமுடையான் களைக் கரையேற்றிய புண்ணியவதிகள் பிறந்த நாடு' என்றேன்.

'என்னை மறந்து விட்டீர்களே!’ என்றாள்.

"ஆம், நான் ஒரு பாவி. நல்ல வழிகாட்ட ஒரு நல்ல மனைவியிருந்தும், கரையேற இயலாது தவிக்கிறேன். எனக்குக் கிடைத்திருக்கும் பாக்கியம் எனக்குத் தெரிய வில்லை. பசி கண்ணை மறைக்கிறது. என்னை ஆட்கொள்ளல் வேண்டும்.”

'பக்தரே உம் பசியை மெச்சினேன். நான் தொழும் கடவுளை உமக்குக் காண்பிக்க யாதொரு ஆட்சேபணையு மில்லை.”

"எங்கே? எங்கே? என் பூனைக் கண்ணுக்குத் தெரிய வில்லையே' என்று இரு கைகளையும் நீட்டிக்கொண்டு, மிரளமிரள விழித்துப் பிரலாபித்தேன். அவர் தூணிலு மிருப்பாரா? துரும்பில்தான் இருப்பாரா?”

'இல்லை, வெண்கலப் பானையிலிருக்கிறார்” என்று சிப்பல் தட்டை நீக்கி உள்ளிருக்கும் சக்கரைப் பொங்கலைக் காண்பித்தாள்.

'ஹாஹா; தரிசித்தேன்! என்வாயில் ஆனந்த பாஷ்பம் ஊறுகிறதே! சுருக்க அவரை இலையில் வட்டியுங்கள், வட்டித்து விடுங்கள்! அவருடன் நான் கலக்க முடியா விட்டாலும், அவர் என்னுடன் கலந்து விடட்டும்.'

'பக்தரே, பதறாதீர்! புண்ணியவதிகளுக்கும் பசிக்கும் என்பதை மறந்துடாதீர்” என்று அவள் என்னைக் கையமர்த்திவிட்டு, இரண்டு விரலால் ஒரு கவளம் வழித்து வாயில் போட்டுக் கொண்டு விரலைத் தொண்டை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பச்சைக்கனவு.pdf/33&oldid=590691" இலிருந்து மீள்விக்கப்பட்டது