பக்கம்:பச்சைக்கனவு.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28 0 லா. ச. ராமாமிருதம்

இருக்காதா? நீ எனக்கு வைத்திருக்கும் சூனியத்திற்கு எவ்வளவு சக்தி என்று நான் அறிந்து கொள்ள வேண்டாமா?

எனக்கே சரியாய்ப் புரியவில்லை. அவளை ஏன் பிறந்த வீட்டுக்குப் போகச் சொன்னேன்?

ஒருவர் சக்தியை ஒருவர் ஆழம் பார்க்க வேணுமென் றிருக்கலாம்- மிருகங்கள் தங்கள் பலத்தை ஆராய்வது போல்.

அல்லது அவள் என் அருகில் இருப்பது கனிந்த தழலின் அழகைக் கையில் ஏந்தி அ னு பவி க்க முயல்வது போன்றிருக்கலாம்.

இருந்தும், சொன்னதும் ஏன் சொன்னேன் என்று மனம் அங்கலாய்க்க ஆரம்பித்து விட்டது. அவள் என்னைத் தகித்தாலும் அவளை விட்டுப் பிரிய மனம் வரவில்லை.

அரைக்கணம் ஒளி மங்கினாள் போலிருந்தது. இருந்தும் இங்குதான் இருப்பேன் என்று முரண்டவில்லை. அப்படிச் சொல்லமாட்டானா என்று என் மனம் ஏங்கிற்று. ஆனால், அவள் விட்டுக் கொடுக்காமல் அப்படியே போய்விடுகிறேன்” என்று விட்டுத் திரும்பிப் படுத்துக் கொண்டு விட்டாள்.

அம்மாவுக்கு அவள் ஊருக்குப் போகும் காரணம் தெரியாது. எங்களுக்கே தெரியவில்லையே. ஏதோ சாக்குச் சொல்லி அவள் சகோதரனை வரவழைத்தாகி விட்டது. வாசலில் வண்டி நின்றது.

என் அறைக்குள் வந்து நின்றாள். நான் ஒரு புத்தகத்தை வைத்துக் கொண்டு, மனம் அதில் அழுந்தாது, மும்முரமாகப் படித்துக் கொண்டிருந்தேன்.

'வருகிறேன்' என்றாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பச்சைக்கனவு.pdf/37&oldid=590695" இலிருந்து மீள்விக்கப்பட்டது