பக்கம்:பச்சைக்கனவு.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அபூர்வ ராகம் O 37

உள்பிரக்ஞையிருக்கையிலேயே மண்டையில் சம்மட்டி யிலடிப்பது போலிருந்தது. அம்மாவுக்குத் தந்தியடிக்க விலாசத்தையும் பணத்தையும் அவரிடமே கொடுத்து விட்டுக் கட்டிலண்டை வந்து உட்கார்ந்தவன்தான். எத்தனை நாழி இப்படி இடம் பெயராது திக்பிரமை கொண்டு உட்கார்ந்திருந்தேனோ அறியேன்.

என்னில் என்னென்ன எண்ணங்கள் ஓடின அறியேன். வெளியே அடைமழை பெய்துகொண்டிருந்தது நினைவிருக் கிறது. எங்களுக்கு நம்பிக்கையிருக்கிறதோயில்லையோ, ஒரு நாளும் தவறாது எரியும் சுவாமி விளக்கு இரண்டு நாளாய் எரியவில்லை. அது நினைவிருக்கிறது.

கண்ணெதிரில் கடுஞ்சுரம் அவள் பசுமையை உறிஞ்சு வதைப் பார்த்துக் கொண்டிருந்தேன். அது நினைவிருக் கிறது.

வைத்தியர் தினம் மூன்று தடவை வந்தார். ஒவ்வொரு தடவையும் அவர் முகம் சுண்டியது. அது ஞாபகமிருக் கிறது.

என் தோளைப் பிடித்துக் குலுக்கினார். "தைரியமா யிருமய்யா. உமக்கு முதலில் ஒரு ஊசிபோட வேண்டும் போலிருக்கிறது. இந்த மும்முரத்தில் ஒரு மருந்தும் ஒன்றும் செய்வதற்கில்லை. இன்று ராத்திரி தாண்டனும். நீர் கூடியவரைக்கும் தெம்பாயிரும். நீங்கள் இப்படியிருந்தால் அப்புறம் படித்தவனுக்கும் படியாதவனுக்கும் என்ன வித்தியாசமிருக்கிறது?’’

நாங்கள் படித்தவருமில்லை; படியாதவருமில்லை. தாங்கள் மிருகங்கள்.

"இளம் வயது- அதுதான் தாக்குப் பிடிக்கவேணும்உங்க அம்மா வந்துவிட்டாரா?”

அம்மா, மாலை அஸ்தமன வேளைக்கு வந்தாள். என்னுடன் பேசவில்லை. கட்டிலில் படுத்திருந்தவள் முகத்தை ஒரே முறை பார்த்தாள். நாடியைத் தொட்டாள். நேரே குழாயடிக்குப் போய் ஸ்னானம் பண்ணினாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பச்சைக்கனவு.pdf/46&oldid=590704" இலிருந்து மீள்விக்கப்பட்டது