பக்கம்:பச்சைக்கனவு.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அபூர்வ ராகம் O 45

கூட அவள் இசையாள். சுறாமீன்களுக்கு இரையானா லும் ஆவேனென்று, சமுத்திரத்திற்குள் நடந்து போய் விட்டாள். கடவுளுக்கு மயிரைக் கேட்டாய். உயிரையே கொடுத்துவிட்டாள் போ. அவள் சொல்லிக்கொண்டு தான் போனாள். எனக்குத்தான் தெரியவில்லை. ராகம் முடிந்துவிட்டது. இனி, வீணை வீணையாய் உபயோகப் படாது. அடுப்பில் வைக்கத்தான் சரி. நான் என்னுள் இறந்துவிட்டேன்; இறந்தே போனேன். நீ எதைச் சொன்னாலும் கேட்கத் தயார்-'

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பச்சைக்கனவு.pdf/54&oldid=590712" இலிருந்து மீள்விக்கப்பட்டது