82 0 லா. ச. ராமாமிருதம்
பிறகு சொல்கிறேன். நீங்கள் முதலில் சொல்லுங்கள். ஆயிரம்- ஏன், ஆயிரத்தைந்நூறாகத்தான் இருக்கட்டுமே ஒரு மட்டாய்க் கிடைத்தால் என்ன செய்வீர்கள்?
"என்ன செய்ய முடியாது? என்ன வேனுமானாலும் செய்யலாம். குதிரைவாலில் கட்டி ஒரு மட்டாய்த் தோற்க லாம்; கெவித்தால் பதினைந்தாயிரமாய்ப் பண்ணலாம்.'
"அவர் முகம் சட்டென மாறிற்று. அப்புறந்தான் தெரிந்தது. அவருக்கு ரேஸ் பைத்தியம் உண்டு என்று.”
'உங்களைப் பொறுத்தவரையில் சொல்லுங்களேன்."
'எனக்கு யோசனை சுவாரசியமாய்த் தானாவே ஒடத்தலைப்பட்டது. பார்க்கலாம், இப்போது நான் வைத்துக் கொண்டிருக்கும் "டியூஷன்களுக்கு அக்கடா என்று ஒரு வருஷத்துக்காவது முழுக்குப் போட்டு விடலாம். செளகரியமாய் இஷ்டப்படி சாதகம் செய்ய லாம். நல்ல குருவை அடுத்துப் பாடம் கேட்கலாம். மதுரைக்குப் போய் ஒலைச் சுவடிகளைப் புரட்டி ஒரு வருஷமாவது ஆராய்ச்சி செய்ய வேண்டுமென வெகு நாளாய் ஒர் அவா உண்டு.'
பேஷ், பேஷ்!" என்று பையிலிருந்து செக் புத்தகத்தை எடுத்துத் துடையில் வைத்துக் கொண்டு எழுத ஆரம் பித்தார். உங்கள் முதல் எழுத்து என்ன?
'ஏது, என் விஷயத்தில் இவ்வளவு அக்கறை திடீரென்று?
'உம்மிடத்தில் அக்கறை இல்லை. எனக்கு என் பெண் மேல் இருக்கும் அக்கறுைதான்."
'இதென்ன குரு தகrணையா? 'அப்படித்தான் வைத்துக் கொள்ளுமே.' 'இதென்ன, இந்த மூன்று நாளில் தாகூrாயணி சங்கீதத் தில் மேதையாகிவிட்டாளா என்ன?”