பக்கம்:பஞ்சாயத்து நிர்வாக முறை.pdf/224

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

29 பிக்கும்போது தேர்தல் அதிகாரியிடம் ஐம்பது ரூபாய் ரொக்கத் தொகையை அல்லது அவர் ஷெட்யூல்டு வகுப் பினர்-மலே ஜாதியினராக இருந்தால் இருபத்தைந்து ரூபாய் ரொக்கத் தொகையை டெபாஸிட் செய்ய வேண்டும். இல்லாவிடில் அந்த அபேட்சகர் கிரமமாக நியமனம் செய்யப் பட்டவராக கருதப்படமாட்டார். தேர்தலில் நிற்க விரும்பும் அபேட்சகருக்கு ஒரே வார்டுக்கும் தனித்தனியாக டெபாஸிட் கட்ட வேண்டும். ஆல்ை, ஒரு அபேட்சகருக்கு ஒரே வார்டில் பல நியமனச் சீட்டுகள் கொடுக்கப்பட்டால் இந்தத் துணை விதியின்படி அவர் ஒன்றுக்கு மேற்பட்ட டெபாஸிட் கட்ட வேண்டியதில்லை. (2) துணை விதி 1-ன்படி கட்டிய டெபாஸிட் 3, அல்லது 4, துணை விதியின்படி, பஞ்சாயத்துக்கு பறிமுதல் செய்யப் பட்டாலொழிய, தேர்தல் முடிவு அறிவிக்கப்பட்டபிறகு, அதைச் செலுத்தியவரிடம் அல்லது அவருடைய சட்டபூர்வு மான பிரதிநிதியிடம் கூடியவிரைவில் திருப்பிக் கொடுத்துவிட வேண்டும். ரு அபேட்சகரின் பெயர் போட்டியிடும் அபேட்சகர் களின் ஜாபிதாவில் காட்டப்படாவிட்டால் அல்லது வாக் கெடுப்பதற்கு முன் அவர் இறந்துவிட்டால், சந்தர்ப்பத்திற் கேற்ப, ஜாபிதா விளம்பரப்படுத்தப்பட்ட பிறகு அல்லது அவருடைய மரணத்துக்குப் பிறகு கூடிய விரைவில் அவருடைய டெபாஸிட் தொகையை திருப்பிக் கொடுத்துவிட வேண்டும். (3) ஒரு அபேட்சகர் தேர்ந்தெடுக்கப்படாமல் அவ ருக்கு கிடைத்த வாக்குகளின் எண்ணிக்கையானது, மற்ற அபேட்சகர்களுக்கு கிடைத்த மொத்த வாக்குகளே தேர்ந் தெடுக்கப்பட வேண்டிய நபர்களின் எண்ணிக்கையால் வகுத்து கிடைத்ததில் ஆறில் ஒரு பகுதிக்கு மேற்படா விட்டால் அவர் கட்டிய டெபாஸிட் பஞ்சாயத்துக்கு பறிமுதல் ஆகிவிடும். - (4) துணை விதிகள் 2, 3ல் என்ன சொல்லியிருந்த போதிலும், ஒரு அபேட்சகர் ஒரு தேர்தலில் பல வார்டுகளில் பேர்ட்டியிட்டால் அவருடைய அபேட்சைக்காக 1, துனே விதியின்படி கட்டப்பட்ட டெபாஸிட்டுகளில் ஒரு டெபாஸிட்