பக்கம்:பஞ்சாயத்து நிர்வாக முறை.pdf/319

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

128 இன்ஸ்பெக்டர் ஒரு அறிவிப்பின் மூலம் மூன்று மாதங்களுக்கு மேற் போகாமல் நீடித்து அல்லது குறைத்து கட்டளே. யிடலாம். - - - (2) பஞ்சாயத்துக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட அங்கத் தினர்களின் பதவிக் காலம், சாதாரணமாகக் காலியாகும் போது சாதாரண தேர்தல்கள் நடத்தி நிரப்பப்பட வேண்டும். மேற்படி பதவிக்காலம் முடிவடைவதற்கு மூன்று மாதங்கள் முன்னதாகவே, தேர்தல் அதிகாரியானவர், ஒரு தேதி குறிப்பிட்டு,அந்த தேதியில் தேர்தலே நடத்திவிட வேண்டும். எனினும், தகுந்த காரணத்தை உத்தேசித்து, காலி ஸ்தானம் ஏற்பட்ட பின், ஒரு சாதாரண தேர்தல் நடத்தும் படி அரசாங்கம் கட்டளேயிடவோ, அனுமதிக்கவோ செய்யலாம். (3) (a) பஞ்சாயத்துக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஓர் அங்கத்தினர் பதவி தற்செயலாகக் காலியானல் குறிப்பிட்ட காலவரைக்குள் அதை நிர்வாக அதிகாரி தெரிவிக்க வேண்டும். (b) தற்செயலாக ஏற்பட்ட காலி ஸ்தானத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பெற்ற அங்கத்தினர் உடனே பதவி வகிக்கத் தொடங்க வேண்டும். எந்த அங்கத்தினரின் ஸ்தானத்துக் காக இவர் தேர்ந்தெடுக்கப்பட்டாரோ, அவருடைய பதவி காலியாகாமலிருந்தால் எவ்வளவு காலம் பதவி வகிக்க அவர் உரிமை உள்ளவராக இருப்பாரோ அவ்வளவு காலத்துக்கு இவரும் பதவி வகிக்க உரிமை உள்ளவராவார். (c) இன்ஸ்பெக்டர் வேறுவிதமாக உத்தரவிட்டா லன்றி, ஒரு பஞ்சாயத்தின் பதவிக்காலம் முடிவடைவதற்கு ஆறு மாதமே இருந்தால், அப்போது தற்செயலான தேர்தல் எதுவும் நடத்தக்கூடாது. (4) ஒரு பஞ்சாயத்து அங்கத்தினர்களின் எண்ணிக்கை அதிகப்படுத்தப்பட்டால், அப்படி அதிகமான ஸ்தானங் களுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட அங்கத்தினர்கள், முந்திய சாதாரண தேர்தல் மூலம் வந்த அங்கத்தினர்கள் பதவியை விட்டுவிலகுகிறபோது இவர்களும் பதவியை விட்டு விலகி விட வேண்டும். - (5) 15-வது பிரிவு, (4) உட்பிரிவின்கீழ், நியமனம் செய்யுங்பட்ட (பெண்) கூட்டு அங்கத்தின்ர், ஒரு சாதாரண