பக்கம்:பஞ்சாயத்து நிர்வாக முறை.pdf/326

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

135 அங்கத்தினராகச் சேர்த்துக் கொள்ளப்பட்ட தேதியிலிருந் தாவது தொடங்கி மூன்று மாதகாலம் தொடர்ந்து கூட்டங் களுக்கு வராமல் இருந்து விட்டாலும் அல்லது அந்தக் கால அளவுக்குள் மூன்றுக்கும் குறைவான கூட்டங்கள் கூடி இருந்தாலும் அந்தத் தேதியிலிருந்து மூன்று கூட்டங்களுக்கு தொடர்ந்து வராமல் இருந்துவிட்டாலும்; எனினும், இந்த உட்பிரிவின்கீழ் ஒர் அங்கத்தினருக்கு எதிராக கீழ்க்காணும் கூட்டங்களே கணக்கிடக்கூடாது. (i) கூட்டம் பற்றிய நோட்டீஸ், அங்கத்தினருக்கு கொடுக்கப்படவில்லே என்ருலும், - (ii) சாதாரண கூட்டத்துக்கு நிர்ணயம் செய்யப் பட்ட த காலஅளவுக்கும் குறைவாக அவகாசம் அளித்து நோட்டீஸ் கொடுத்தபின் நடைபெற்ற கூட்டமும், (iii) அங்கத்தினர்களின் .ே வண் டு .ே க | ளு க்கு இணங்க நடைபெற்ற கூட்டமும். 27. அங்கத்தினர்களே மீண்டும் பதவியில் சேர்த்துக் கொள்வது (1) 24-வது பிரிவு அல்லது 26-வது பிரிவு (a) உட்பிரிவின்படியோ ஒருவர் அங்கத்தினர் பதவியை இழந்து விட்டாலும், அப்பீலில் அவருடைய தண்டனே ரத்து செய்யப் பெற்றுவிட்டால், மறுபடியும் அவரை அங்கத்தினராகச் சேர்த்துக் கொள்ளலாம். இடைக்காலத்திலே அந்தப் பதவிக்கு வந்தவர் தமது ஸ்தானத்தை காலி செய்து கொடுக்க வேண்டும். இவ்விதம் மீண்டும் சேர்த்துக் கொள்ளப்பட்டவர் செல்லுபோக மீதியிருக்கும் பதவிக் காலம் முழுவதுக்கும் அங்கத்தினராக இருக்கலாம். (2) 26-வது பிரிவு (i) பகுதியின்படி ஒருவர் அங்கத் தினர் பதவியினின்றும் நீங்கினால், உடனே அ ந் த விஷயத்தை சம்பந்தப்பட்ட கமிஷனரோ அல்லது நிர்வாக அதிகாரியோ அவருக்கு எழுத்து மூலம் தெரிவிக்க வேண்டும். மற்றும் அதை பஞ்சாயத்து அல்லது பஞ்சாயத்து யூனியன் கவுன்சிலின் அடுத்த கூட்டத்தில் தெரிவிக்க வேண்டும். கூட்டம் நடைபெறும் தேதியிலாவது அல்லது அதற்கு முன்பாவது அல்லது மேற்படி தகவல் கிடைத்த பதினேந்து நாட்களுக்குள்ளாவது மேற்படி அங்கத்தினர், தம்மை மறுபடியும் அங்கத்தினராக சேர்த்துக் கொள்ளும்படி பஞ்சா