பக்கம்:பஞ்சாயத்து நிர்வாக முறை.pdf/337

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

146 89. தலைவர், துணைத்தலைவர், சேர்மன், வைஸ் சேர்மன் அங்கத்தினர் சன்மானம் பெறக்கூடாது. தலைவர், 'துணைத் தலைவர், சேர்மன், வைஸ் சேர்மன், அங்கத்தினர் தாம் வகிக்கின்ற பதவி காரணமாகவேர் அல்லது வேறு வகையில் செய்யும் சேவைகளுக்கோ பஞ்சாயத்து அல்லது பஞ்சாயத்து யூனியன் கவுன்சில் செலவு செய்வதற்கான அல்லது அதன் கட்டுப்பாட்டுக்கு உள்ளான நிதிகளிலிருந்து ஏதாவது சம்பளமோ அல்லது மற்ற சன்மானமோ பெற்றுக் கொள்ளக் கூடாது. நிர்வாக அதிகாரி 40. சில பஞ்சாயத்துகளுக்கு நிர்வாக அதிகாரிகளை நியமித்தல். (1) ஒவ்வொரு பட்டணப் பஞ்சாயத்துக்கும் அரசாங்கம், ஒரு முழுநேர நிர்வாக அதிகாரியை நியமிக்க வேண்டும். (2) கிராமப் பஞ்சாயத்துகள் விஷயத்தில், நிர்ணயிக்கப் படும் விதிகளுக்கு உட்பட்டு, அந்த பஞ்சாயத்துகளின் தலேவர்களே நிர்வாக அதிகாரியின் அலுவல்களேச் செய்து வர வேண்டும். - (3) வேறுவிதமாக நிர்ணயிக்கப்பட்டிருந்தாலன்றி, உட் பிரிவு (1)ன் படி நியமிக்கப்படும் எந்த நிர்வாக அதிகாரியும் பஞ்சாயத்து அல்லது அரசாங்கத்தின் அனுமதியில்லாமல் தமது பதவிக்கு சம்பந்தமில்லாத எந்த வேலையையும் மேற் கொள்ளக் கூடாது. (4) அரசாங்கத்தால் அவ்வப்போது நிர்ணயிக்கப்படும் சம்பளத்தையும் அலவன்ஸையும் நிர்வாக அதிகாரிக்கு பஞ்சாயத்து கொடுக்க வேண்டும். (5) மேலும், (a) நிர்வாக அதிகாரி அரசாங்க சேவையில் இருப்பு வரானல், அரசாங்கத்தின் கீழ் அவருடைய சேவைக்கு உரிய நிபந்தனேகளின்படி, அவரால் அல்லது அவருடைய சார்பாக செலுத்த வேண்டிய லீவு கால அலவன்ஸ்கள், பென்ஷன், பிராவிடண்ட் பண்ட் ஆகியவற்றுக்கான ● 5 r 誌」 நிதியையும்;