பக்கம்:பஞ்சாயத்து நிர்வாக முறை.pdf/365

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ł74 (a) எந்தப் பொதுச் சாலேயின் மீது சுவரையோ, வேலி யையோ வேறு இடைஞ்சலேயோ அல்லது பிதுக்கம் அல்லது ஆக்கிரமிப்பும் தற்காலிகமாகவோ, நிரந்தரமாகவோ செய்யக் கூடாது. (b) எந்தப் பொதுத் சாலேயிலும் துவாரமிடவோ, எதையும் கொட்டி வைக்கவோ கூடாது. (c) ஒரு பொதுச் சாலேயிலிருந்து இருபது கெஜ துரத்துக்குள் உள்ள எந்த இடத்திலிருந்தும் அல்லது பஞ்சா யத்து அல்லது பஞ்சாயத்து யூனியன் கவுன்ஸிலுக்குச் சொந்தமான ஸ்தாவர சொத்துக்களிலிருந்து கல்லேயோ, மண்ணேயோ வெட்டி அப்புறப்படுத்தக் கூடாது. எனினும் அவ்வாறு செய்வது உண்மையான விவசாய காரியத்துக்காக செய்யப்பட்டது என இன்ஸ்பெக்டர் அபிப்பிராயப் பட்டால் இவ்விதிகள் எதுவும் அதைப் பாதிக்காது. (d) சாக்கடை அல்லது ஜலதாரை மீது கட்டிடம் எதுவும் எழுப்பக் கூடாது. (e) பஞ்சாயத்து அல்லது பஞ்சாயத்து யூனியன் கவுன்சிலுக்குச் சொந்தமான பொதுச்சாலே அல்லது வேறு எந்த இடத்திலும் மரங்களே நடக்கூடாது. (f) பஞ்சாயத்தால் 86 அல்லது 87 பிரிவின்படி, அதன் உபயோகத்தை ஒழுங்கு முறை செய்யப்பட் டுள்ளதும் அதன் உரிமையை யாரும் நிலேநாட்டி இல்லாத பொதுச் சாலேயிலாவது, சொத்துக்களிலாவது புறம்போக்கி லாவது வளர்ந்து நிற்கும் மரங்களே வெட்டவோ, பட்டை உரிக்கவோ அல்லது இலேகளே, பழங்களே எடுத்துக் கொண்டு போகவோ அல்லது வேறு விதமாகச் சேதப்படுத்தவோ கூடாது. (2) பஞ்சாயத்து அல்லது பஞ்சாயத்து யூனியன் கவுன்சிலுக்குச் சொந்தமான சொத்துக்களின்மீது ஆக்ர மிப்பதை நிர்வாக அதிகாரி அல்லது கமிஷனருக்குத் தெரிவிப்பது ஒவ்வொரு ரெவின்யூ கிராமக் கர்ணத்துட்ைய கடமையாகும். அரசாங்கத்தின் பொதுவான அல்லது விசேஷ உத்தரவின் மூலம் குறிப்பிடும் காலவரம்புக்குள் ஆக்கிரமிப்புகளே அகற்றுவதற்கு வேண்டிய நடவடிக்கைகளே இச்சட்டத்தின்கீழ் அதை விசாரணை செய்து பரிகாரம் காண்பது சம்பந்தப்பட்ட நிர்வாக அதிகாரி அல்லது