பக்கம்:பஞ்சாயத்து நிர்வாக முறை.pdf/426

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

235 அல்லது லேசென்ஸைப் பெற்றுக்கொண்டு அதன் நிபந்தனை களுக்குப் பொருந்தாத விதத்தில் செய்யப்பட்டால் அப்போது (a) பஞ்சாயத்தின் நிர்வாக அதிகாரி அல்லது கமிஷனர், அந்தக் காரியத்தை அவ்வாறு செய்கிற நபருக்கு நோட்டீஸ் அனுப்பி, அதில் குறிப்பிட்டுள்ள கால அளவுக்குள் அந்தக் காரியத்தால் பாதிக்கப்பட்ட ஸ்தாவர சங்கம சொத்து-தனியார் சொத்தானுலும் அரசாங்கத்தின் சொத் தானுலும் சரி, முழுவதையுமோ அல்லது அதன் ஒரு பாகத் தையோ மாற்றும்படியோ, அகற்றும்படியோ அல்லது முன்பு இருந்த நிலக்கு கொண்டுவரும்படியோ கேட்கலாம். அது தவிர, - - - (b) அப்படிப்பட்ட காரியத்தை செய்வதற்காக, பிரத்தியேகமான தண்டனை , இச்சட்டத்தில் ஏற்படுத்தப்பட் டிராத பட்சத்தில், அப்படிச் செய்யும் நபருக்கு ஒவ்வொரு குற்றத்துக்கும் ஐம்பது ரூபாய்க்கு மேற்படாமல் அபராதத் தண்டனே விதிக்கலாம். (6) அத்தகைய லேசென்ஸ் அல்லது அனுமதியைப் பெற்றுக்கொள்ளத் தவறியது காரணமாக, ஒருவரைக் குற்ற வாளி என்று தீர்மானிக்கும்போது எல்லாம், மாஜிஸ்டிரேட் விதிக்கக்கூடிய ஏதாவது ஒரு அபராதத் தண்டனையுடன் மேற்படி அனுமதி அல்லது லேசென்ஸ் கட்டணத்தையும் சேர்த்து, அதற்காக விசாரனே இன்றி வசூலித்து, அதை நிலேமைக்கு ஏற்ப, பஞ்சாயத்து அல்லது பஞ்சாயத்து யூனியன் கவுன்ஸிலுக்கு செலுத்தும்படி கட்டளை இடலாம். மேலும், தமது உசிதப்படி, வழக்குக்கு உண்டான செலவு களுக்கு தாம் நிச்சயிக்கிற தொகையை உடனடியாக வசூலித்து,அதையும் பஞ்சாயத்துக்கோ அல்லது பஞ்சாயத்து யூனியன் கவுன்சிலுக்கோ செலுத்த வேண்டும். விளக்கம் : இந்த உட்பிரிவின்கீழ் அனுமதி அல்லது லேசென்ஸ் கட்டணத்தை வசூலிப்பதினாலேயே குற்றவாளி யெனத் தீர்மானிக்கப்பட்ட நபருக்கு, லேசென்ளை அல்லது அனுமதியைப் பெறப் பாத்தியதை ஏற்பட்டு விடாது. 180. அரசாங்கத்துக்கும், மார்க்கட் கமிட்டிகளுக்கும் லைசென்ஸ்கள், அனுமதிகள் பெற வேண்டியதில்லை இந்தச் சட்டத்தின்படியோ அல்லது இதன்கீழ் செய்யப் பட்ட விதியின்படியோ என்ன சொல்லியிருந்த போதிலும்,